என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்ககிரி அருகே பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது ரூ.23,830 பறிமுதல்
- அரசு பள்ளியின் பின் புறத்தில் சூதாட்டம் நடப்பதாக, சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ. 23,830-யை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே, சின்னாக்கவுண்டனூர் அரசு பள்ளியின் பின் புறத்தில் சூதாட்டம் நடப்பதாக, சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அவரது உத்திரன்படி, சங்ககிரி எஸ்.ஐ. சுதாகர் தலைமையிலான போலீசார் சின்னாக்கவுண்டனுார் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பணம் வைத்து சூதாடிய நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அம்மன் நகரைச் சேர்ந்த சுந்தரம் (வயது 53), சுந்தரம் காலனியைச் சேர்ந்த சரவணன் (42), தேவூர் புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (28), குமாரபாளையம் ஆனங்கூர் ரோட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் (40), பவானியை சேர்ந்த கோகுல் (38), புள்ளாக்க வுண்டம்பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் (26), ஈரோட்டை சேர்ந்த சேகர் (29), குமாரபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29), பவானியை சேர்ந்த செல்வம் (35), குமாரபாளையம் பாரதி நகரைச் சேர்ந்த முத்துசாமி (37), அமிர்தம் காலணியை சேர்ந்த குமார் (29), குமரன் (35), பாஸ்கரன் (43), ஆகிய 13 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ. 23,830-யை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்