search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி- தேசிய தூய்மை பணியாளர் ஆணைய அதிகாரிகள் ஆய்வு
    X

    ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி- தேசிய தூய்மை பணியாளர் ஆணைய அதிகாரிகள் ஆய்வு

    • மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள்.
    • கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி, ஓ.சி.எப். பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது தொழிலாளர்கள் மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள். இது தொடர்பாக தேசிய தூய்மைபணியாளர்கள் பாதுகாப்பு ஆணைய தலைவர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

    மேலும் அவர்கள், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    Next Story
    ×