search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது
    X

    தஞ்சையில், ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது

    • ஆன்லைன் லாட்டரி விற்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை வண்டிப்பேட்டை பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு ஆன்லைன் லாட்டரி விற்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் டவுன் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்த சசிகுமார் (வயது 22), குமார் (35) என்பதும், சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×