என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்
- தனியார் நிதி நிறுவனத்தில் அருண்குமார் ஊழியராக உள்ளார்.
- அருண்குமார் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
களக்காடு:
கல்லிடைகுறிச்சி குமாரகோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 21). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். நேற்று இவரும், அதே ஊரை சேர்ந்த சக்திவேலும் (23) மோட்டார் சைக்கிளில் களக்காட்டில் இருந்து சேரன்மகாதேவி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பத்மநேரி அருகே உள்ள பிளவக்கல் இசக்கியம்மன் கோவில் ரோட்டில் சென்ற போது, சாலையின் குறுக்கே சென்ற பன்றியின் மீது மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அருண்குமாரும், சக்திவேலும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அருண்குமார் நெல்லை அரசு மருத்துவமனையிலும், சக்திவேல் தனியார் மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்ட னர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்