search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி காளியம்மன் கோவிலில் 2 ஆயிரம் பக்தர்கள்  தீ மிதித்து நேர்த்திக்கடன்
    X

    பக்தர்கள் குண்டம் இறங்கியதையும், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பதையும் படத்தில் காணலாம்.

    எடப்பாடி காளியம்மன் கோவிலில் 2 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

    • எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட தாவாந்தெரு காளியம்மன் திருக்கோவில் மாசி மாத தீமிதி திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.
    • பின்னர் குழந்தைகள், பெண்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீமிதித்து காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட தாவாந்தெரு காளியம்மன் திருக்கோவில் மாசி மாத தீமிதி திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை சரபங்காநதிக்கு சென்று பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு பல்வேறு பக்தர்கள் அலகுகளை குத்திக்கொண்டும், கார்களை கட்டி இழுத்தும் தாவாந்தெரு காளியம்மன் கோவில் வரை ஊர்வலமாக வந்தனர்.

    முதலில் கோவில் பூசாரி பம்பை மேளங்கள் முழங்க ஓம் சக்தி பரா சக்தி என பக்தர்கள் கரவோசை எழுப்பிய போது பூங்கரகத்துடன் தீ மிதித்தார். பின்னர் குழந்தைகள், பெண்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீமிதித்து காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    Next Story
    ×