search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் 2 வாலிபர்கள் தற்கொலை
    X

    தூத்துக்குடியில் 2 வாலிபர்கள் தற்கொலை

    • ஆனந்த்க்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்ததால் தினமும் மது குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
    • இதனால் மன வருத்தம் அடைந்த ஆனந்த் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்ததை எடுத்துக் குடித்துவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் சமீர்வியாஸ் நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 39). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்ததால் மது தினமும் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளனர்.

    இதனை அவரது தாயார் ஜான்சி கண்டித்துள்ளார். இதனால் மேலும் மன வருத்தம் அடைந்த ஆனந்த் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்ததை எடுத்துக் குடித்துவிட்டார். இதனை பார்த்த ஜான்சி உடனே மகனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஆனந்த் உயிரிழந்தார். இது குறித்து தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம்

    தூத்துக்குடி பாத்திமா நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ஜீவா. இவர் தற்போது திரேஸ்புரம் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது மகன் அஜய்(21) தனது தந்தையுடன் சேர்ந்து கடல் தொழிலுக்கு சென்று வந்துள்ளார்.

    இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது அஜய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இது குறித்து தூத்துக்குடி வட பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×