search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் 28 ஆயிரம் பேர் பொங்கல் தொகுப்பு வாங்கவில்லை
    X

    டெல்டா மாவட்டங்களில் 28 ஆயிரம் பேர் பொங்கல் தொகுப்பு வாங்கவில்லை

    • இதில் 15 லட்சத்து 60 ஆயிரத்து 503 பேர் பொங்கல் பரிசு பணம் வாங்கினர்.
    • தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்கவில்லை.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந் தது.ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவடடங்களில் 15 லட்சத்து 88 ஆயிரத்து 937 குடும்ப அட்டைக்கு ரூ.1000 பணம் வழங்க அந்தந்த ரேசன் கார்டுகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதில் 15லட்சத்து 60 ஆயிரத்து 503 பேர் பொங்கல் பரிசு பணம் வாங்கினர்.

    மிதம் 28 ஆயிரத்து 434 பேர் ரூ.1000 வாங்க வில்லை.

    இதைப்போல் தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது.

    இந்த தொகையை அரசு கருவூலத் தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர்.

    Next Story
    ×