search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2-வது நாளாக மோப்பநாய் உதவியுடன் பாகுபலி யானையை கண்காணிக்கும் பணி தீவிரம்
    X

    2-வது நாளாக மோப்பநாய் உதவியுடன் பாகுபலி யானையை கண்காணிக்கும் பணி தீவிரம்

    • யானையை கண்காணிக்க பைரவா, வளவன் என்ற 2 மோப்பநாயக்கள் வரவழைக்கப்பட்டன.
    • யானை தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தாசம்பாளையம், சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பாகுபலி என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானை சுற்றி திரிகிறது.

    இந்த யானை அதிகாலையில் வனத்தை விட்டு வெளியேறி சமயபுரத்தில் சாலையை கடந்து அருகே உள்ள தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் பகுதிகளில் நுழைந்து பயிர்களை சேதம் செய்கிறது. பின்னர் மாலையில் மீண்டும் வனத்திற்கு சென்று விடுகிறது.

    இந்த நிலையில் பாகுபலி யானை அவுட்டுக்காயினை கடித்து வாயில் காயத்துடன் சுற்றி திரிவதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் நேற்று காலை முதல் மாலை வரை ஒரு குழுவிற்கு 6 பேர் வீதம் 2 குழுக்களை அமைத்த பாகுபலி யானையை தீவிரமாக கண்காணித்தனர்.

    ஆனால் யானை வனத்துறையினரின் கண்களில் சிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.இதனையடுத்து வனத்துறையினர் தொடர்ந்து அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் சட்டவிரோதகுற்ற செயல்கள் ஏதும் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க கோவை சாடிவயலில் இருந்து பைரவா, வளவன் என்ற 2 மோப்பநாயக்கள் வரவழைக்கப்பட்டன.

    இன்று 2-வது நாளாக வனத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் பாகுபலி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறும்போது,

    வன ஆர்வலர்கள் கூறு வது போல் பாகுபலி யானை அவுட்டு காயினை கடித்திருந்தால் தசைப்பகுதி கிழிந்திருக்கும். அதன் நடமாட்டம் குறைந்திருக்கும். ஆனால் தற்போது யானை சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

    இந்த காயம் இரு யானைகளுக்கு இடையேயான மோதலில் ஏற்பட்ட காயம். யானை தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. எனினும் யானையினை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×