என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவை செல்வபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது
- சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று இவர் ரோந்து சென்றனர்.
- உடலில் மறைத்து வைத்து இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்
கோவை
கோவை செல்வபுரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று இவர் ரோந்து சென்றனர். அப்போது சுண்டக்காமுத்தூர் ரோடு இடும்பன் கோவில் அருகே சென்ற போது அங்கு 3 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அருகில் சென்று போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உடலில் மறைத்து வைத்து இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த மெக்கானிக் உமர் பாரூக் (வயது 22), கரும்புக்கடையை சேர்ந்த ஆசிக் (22), சாரமேட்டை சேர்ந்த பெயிண்டர் அனிஸ்ரகுமார் (20) என்பது தெரிய வந்தது. இவர்கள் வழிப்பறி செய்வதற்காக நின்று கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்