search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    உளுந்தூர்பேட்டை அருகே மது பாட்டில் விற்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது
    X

    உளுந்தூர்பேட்டை அருகே மது பாட்டில் விற்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

    • கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் வந்தது.
    • மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா அத்திப்பாக்கம் கிராமத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிக்கு தகவல் வந்தது. அக்கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உளுந்தூர்பேட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி அதி்திப்பாக்கம் கிராமத்தில் திருநாவலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டனர். அவர்களை மடிக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த அஞ்சாமணி (வயது 48), சரிதா (25), தேவநாதன் (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அரசின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து மதுபாட்டில் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×