search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் விபத்தில் மின்வாரிய ஊழியர் உள்பட 3 பேர் பலி
    X

    கோவையில் விபத்தில் மின்வாரிய ஊழியர் உள்பட 3 பேர் பலி

    • ரவி காரில் ஒடக்கால்பாளையத்தில் இருந்து சுல்தான்பேட்டை நோக்கி சென்றார்.
    • கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த முள்வேலி மீது ேமாதியது.

    கோவை,

    கோவை சூலூரை சேர்ந்தவர் ரவி (வயது 58). இவர் சுல்தான்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது காரில் ஒடக்கால்பாளையத்தில் இருந்து சுல்தான்பேட்டை நோக்கி சென்றார்.

    கார் எஸ்.எஸ். நகர் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த முள்வேலி மீது ேமாதியது. இதில் படுகாயம் அடைந்த ரவியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் தொட்டிப்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (36). டெய்லர்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பரான பரமக்குடியை சேர்ந்த சண்முகநாதன் (25) என்பவரை தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு அன்னூர்-கரியம் பாளையம் ரோட்டில் சென்றார்.

    அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நின்று கொண்டு இருந்த தனியார் பஸ் மீது மொபட் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டியராஜன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செட்டிப்பாளையம் அருகே உள்ள அருகம்பாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணு பிரதாப் (24).

    சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சரவணம்பட்டி சத்தி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் விஷ்ணு பிரதாப் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×