search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரில் புகையிலை கடத்திய 3 பேர் கைது
    X

    காரில் புகையிலை கடத்திய 3 பேர் கைது

    • பசுவந்தனை போலீசார் ராஜீவ் நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • 3 பேரையும் போலீசார் கைது செய்து, 36 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்

    புதியம்புத்தூர்:

    பசுவந்தனை இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் பசுவந்தனை -கோவில்பட்டி ரோட்டில் ராஜீவ் நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது29), மேல முடிமன் வடக்கு தெருவை சேர்ந்த லட்சுமண பெருமாள் (42), துரைசாமி புரம் தெற்கு தெருவை சேர்ந்த அழகுராஜ் (35) ஆகியோர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகை யிலையை கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.13,200 மதிப்புள்ள 36 கிலோ புகையிலை பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×