search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவை 31-ம்ஆண்டு நிறைவு விழா
    X

    விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    சீர்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவை 31-ம்ஆண்டு நிறைவு விழா

    • சீர்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவை 31-ம்ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது.
    • மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி ஆகிய பள்ளிகளில் இருந்து திருக்குறள் போட்டிகள் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி தாலுக்காவில் உள்ள மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி ஆகிய பள்ளிகளில் இருந்து திருக்குறள் பண்பாட்டு பேரவை 31ஆம்ஆண்டு நிறைவு விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் ஆண்டு முழுவதும் நடத்தி அதிலிருந்து வெற்றி பெறும் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், சீர்காழி - எல்.எம்.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    புலவர் பனசை. மூர்த்தி, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி ராதாகிருஷ்ணன், பேராசிரியர் வீழிநாதன், சாயிராம் கல்விக்குழுமம் தாளாளர் ராஜா ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

    திருக்குறள் பண்பாட்டுப் பேரவை செயலர் சிவ.அன்பழகன், தலைவர் வே. சக்கரபாணி, பொருளர். முரு.முத்துக்கருப்பன் ஆகியோர்கள் தலைமை வகித்தனர். அகோரமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    நிகழ்ச்சியில் ராமநாதன், எல். எம். சி பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மோகன் தாஸ் அறிவாநந்தம், வைத்தியநாத சாமி, ச.மு.இ மேனிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் எஸ். முரளிதரன், பேரவை கொள்கை பரப்புச் செயலர் க.இளங்கோ, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமலிங்கம், சுபம் வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் வித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். துணை செயலர் நந்த.இராசேந்திரன் நன்றிக் கூறினார்.

    Next Story
    ×