search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதோஷம்-அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு 4 நாட்கள் அனுமதி
    X

    பிரதோஷம்-அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு 4 நாட்கள் அனுமதி

    • சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
    • பிரதோஷம் வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலை யில் சதுரகிரி சுந்தர மகா லிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோ ஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் வரும் 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

    இதில் 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையி லும், 7-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள். 4-ந்தேதி வைகாசி மாத பிரதோஷத்தை யொட்டி மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற உள்ளது.

    பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அதேபோல் 6-ந்தேதி வைகாசி அமாவா சையொட்டி சுந்தர மகாலி ங்கம் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. விடுமுறை தினத்தில் பிரதோஷம் வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும், இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. சளி, இருமல், காய்ச்சல் உள்ள வர்கள் கோவிலுக்கு வர வேண்டாம். ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது, எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களான பீடி, சிகரெட், தீப்பெட்டி, மது மற்றும் போதை வஸ்து பொருட்கள், பாலிதீன் கேரிப்பை போன்றவற்றை கொண்டுவர தடை விதிக் கப்பட்டுள்ளது.

    வழிபாட்டிற்கான ஏற்பா டுகளை சுந்தரமகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்கா வலர் ராஜா என்ற பெரிய சாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தால் அனுமதி மறுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×