search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் பக்ரீத் பண்டிகைக்கு 40 ஆயிரம் ஆடுகள் விற்பனை
    X

    சென்னையில் பக்ரீத் பண்டிகைக்கு 40 ஆயிரம் ஆடுகள் விற்பனை

    • பக்ரீத் பண்டிகைக்காக சென்னைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்துள்ளது.
    • வருகிற 16-ந்தேதி ஆடு மற்றும் இறைச்சி வியாபாரம் அதிகரிக்கும்

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது.

    பக்ரீத் பண்டிகைக்காக சென்னைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலையில் இருந்தே ஆடுகள் வரத் தொடங்கி உள்ள நிலையில் இந்த ஆண்டு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ஆடுகள் வரையில் வர இருப்பதாக ஆட்டிறைச்சி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தில் பொதுச் செயலாளர் ராயபுரம் அலி கூறும்போது, பக்ரீத் பண்டிகைக்கு ஆந்திராவில் இருந்தே 90 சதவீத ஆடுகள் வருகை தந்துள்ளன.

    தமிழகத்தின் சில மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் வந்துள்ளன. சென்னையில் புளியந்தோப்பு, ரெட்டேரி, வியாசர்பாடி ஆகிய 4 இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரையில் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும்.

    இந்த ஆண்டு உற்பத்தி குறைவால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ஆடுகளின் விலை அதிகரித்துள்ளது. ரூ.50 கோடி வரையில் ஆடுகள் விற்பனையாக வாய்ப்பு உள்ளது என்றார்.

    பக்ரீத் பண்டிகையை யொட்டி வருகிற 16-ந்தேதி ஆடு மற்றும் இறைச்சி வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×