search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சென்னை வந்த துபாய் பயணிகளிடம் இருந்து 910 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், செல்பேசி, சிகரெட் பாக்கெட்கள்

    சென்னை வந்த துபாய் பயணிகளிடம் இருந்து 910 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல்

    • பயணி உடலில் மறைத்து எடுத்து வரப்பட்ட பசை வடிவ தங்கம் பறிமுதல்.
    • செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன

    சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவரை சோதனை செய்தபோது, அவர் ரூ.17.15 லட்சம் மதிப்புள்ள 385 கிராம் தங்க கட்டியை உலோகத் தகடுகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அவரது பைகளிலிருந்து 15 செல்பேசிகளும் 9000 சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 3.15 லட்சம் ஆகும்.

    இதே போல் அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியை சோதனை செய்தபோது ரூ. 23.38 லட்சம் மதிப்புள்ள 525 கிராம் எடையுள்ள தங்கத்தை பசை வடிவில் அவரது உடலில் மறைத்து எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

    இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்த இரு வேறு சோதனைகளில் மொத்தம் ரூ.40.53 லட்சம் மதிப்புள்ள 910 கிராம் தங்கம், 3.15 லட்சம் மதிப்புள்ள செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×