search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா-புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது
    X

    கஞ்சா-புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது

    • கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
    • மாவட்டம் முழுவதும் இது தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி போச்சம் பள்ளி முல்லை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வேல்முருகன் (வயது 44) என்பவரை போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல மத்திகிரி பகுதியில் குலாம் முகமது (70) என்பவரையும், சூளகிரி பகுதியில் முருகேசன் (60), பைசல் (23) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    கெலமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய நாகராஜ் (55), மஞ்சுநாத் (35) மற்றொரு நாகராஜ் (35) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×