search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரு தரப்பினர் மோதல் -7 பேர் கைது
    X

    இரு தரப்பினர் மோதல் -7 பேர் கைது

    • இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • 2 தரப்பையும் சேர்ந்த ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ளது கருங்கல் நகர். இப்பகுதியை சேர்ந்த சீனிவாசன், கண்ணன், மோகன் உள்ளிட்ட நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

    ஆம்பள்ளி காலனி அருகே சென்றபோது ஏன்இருசக்கர வாகனத்தை வேகமாக ஒட்டி வருகின்றீர்கள் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து கேட்டுள்ளனர்.

    அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து கருங்கல் நகர் பகுதியினர் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்நிலையில் ஆம்பள்ளி காலனி பகுதியை சேர்ந்த ராமன், லட்சுமணன், சக்தினாதன் உள்பட 12 பேர் ஒன்பது இருசக்கர வாகனங்களில் கருங்கல் நகர் சென்று சீனிவாசனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    அந்த ஊர் காரர்கள் சுற்றி வளைக்கவே இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து 2 தரப்பையும் சேர்ந்த ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×