search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நடமாடும் நூலகத்தின் 91-ம் ஆண்டு நிறைவு விழா
    X

    நடமாடும் நூலகத்தை உருவாக்கிய பொறியாளர் எஸ்.வி. கனகசபைபிள்ளை உருவ படத்திற்கு மாலை அணிவித்னர்.

    நடமாடும் நூலகத்தின் 91-ம் ஆண்டு நிறைவு விழா

    • இந்தியாவிலேயே முதன்முதலில் மன்னார்குடியில் தொடங்கப்பட்ட முதல் நடமாடும் நூலகம்.
    • 91 ஆம் ஆண்டின் நிறைவு விழா மன்னார்குடி வ.உ.சி சாலையிலுள்ள அரசு கிளை நூலகத்தில் நடைபெற்றன.

    மன்னார்குடி:

    இந்தியாவிலேயே முதன்முதலில் மன்னார்குடியில தொடங்கப்பட்ட முதல் நடமாடும் நூலகத்தின் 91 ஆம் ஆண்டின் நிறைவு விழா மன்னார்குடி வ.உ.சி சாலையிலுள்ள அரசு கிளை நூலகத்தில் நடைபெற்றன.

    நூலகர் அன்பரசு தலைமை வகித்தார்.

    கூத்தாநல்லூர் கிளை நூகர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

    தமிழக தமிழறிஞர்களின் மாவட்ட தலைவர் புரவலர் முனைவர் இருளப்பன் நடமாடும் நூலகத்தை உருவாக்கிய பொறியாளர் எஸ்.வி. கனகசபைபிள்ளை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் நூலக பணியாளர் சமூக ஆர்வலர் சரவணகுமார், போட்டி தேர்வு பயிற்சி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவர் அஜித் நன்றி கூறினார்.

    Next Story
    ×