search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் கொண்ட கும்பல்
    X

    கோவையில் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் கொண்ட கும்பல்

    • அவரிடமிருந்து ரூ.1500 பணம் மற்றும் செல்போனை எடுத்து தப்பிச் சென்றனர்.
    • சரவணம்பட்டி போலீசார் 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கணபதி அருகே நேதாஜி நகரை சேர்ந்தவர் விமல் (வயது30). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து, கம்பெனி வளாகத்தில் தங்கி உள்ளார்.

    இந்நிலையில் இவர் சின்னவேடம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்துவது வழக்கம்.

    இதையடுத்து அவர் சின்னவேடம்பட்டி டாஸ்மாக் கடை அருகில் மது அருந்திவிட்டு அமர்ந்து இருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அப்போது அவரிடம் மது அருந்த பணம் தருமாறு கேட்டுள்ளனர். இந்நிலையில் விமல் என்னிடம் பணம் இல்லை என்று கூறி மறுத்துள்ளார். இதயைடுத்து அந்த கும்பல் அவரது சட்டைப் பையில் இருந்து செல்போன் மற்றும் பேன்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸ் ஆகியவற்றை எடுத்தனர்.

    இதனை விமல் தடுக்க முயன்ற போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தாங்கள் வைத்து இருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரை சரமாரியாக தாக்கி தரையில் தள்ளி விட்டனர். இதில் அவருக்கு தலை மற்றும் உதடுகளில் பலத்தகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார்.

    அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த கும்பல் அவரிடம் இருந்து, ரூ.1500 பணம் மற்றும் செல்போனை எடுத்து தப்பிச் சென்றனர்.

    பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சத்தி வீதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து விமல் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×