search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காஞ்சிபுரம் அருகே ஓரினச்சேர்க்கையில் 5 வயது சிறுவனை அடித்து கொன்ற அரசு அதிகாரி
    X

    காஞ்சிபுரம் அருகே ஓரினச்சேர்க்கையில் 5 வயது சிறுவனை அடித்து கொன்ற அரசு அதிகாரி

    • ஆபாச படங்களை காட்டி ஓரினச்சேர்க்கை.
    • உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், கருக்குப் பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது34). இவர் காஞ்சிபுரம் நில அளவை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மேலும் பரந்தூர் விமான நிலைய திட்டத்திலும் நில அளவையில் பணியாற்றினார்.

    இவரது மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் ராஜேஷ் தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார்.

    அதே பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஒருவர் தனது தாயுடன் தள்ளுவண்டியில் டிபன் படை வைத்து உள்ளார்.

    கடைக்கு அடிக்கடி சென்று வரும்போது இளம் பெண்ணுடன் ராஜேசுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது 4-ம் வகுப்பு படித்து வரும் இளம்பெண்ணின் 9 வயது மகள், மற்றும் 1-ம் வகுப்பு படித்து வந்த 5 வயது மகன் குகன் ஆகியோருடனும் ராஜேஷ் நெருக்கமானார்.

    இளம்பெண்ணின் ஏழ்மையை தெரிந்து கொண்ட ராஜேஷ் தனக்கு தெரிந்து அறக்கட்டளை மூலம் சிறுவனையும், சிறுமியையும் படிக்க வைப்பதாக தெரிவித்தார்.

    இதனால் இளம் பெண்ணும் ராஜேசுடன் மிகவும் நெருக்கமானார். அவரது மகன், மகளுடன் ராஜேஷ் பழுகுவதையும் தவறாக நினைக்கவில்லை.

    இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ராஜேஷ் சிறுவன் குகனை தனது வீட்டுக்கு அழைத்து சென்று செல்போனில் ஆபாச படங்களை காட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்.

    மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக் கூடாது என்று மிரட்டினார். இதனால் சிறுவன் குகன் இதுபற்றி யாரிடமும் கூறாமல் இருந்தார்.

    இந்த நிலையில் குகனுக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தார். அவனை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது சிறுவன் குகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவன் தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதுபற்றி விசாரித்த போதுதான் ராஜேஷ் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட போது மறுத்து சத்தமிட்டதால் சிறுவன் குகனை தாக்கியதும் பின்னர் அவனை வீட்டில் வந்து விட்டு சென்று இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலஅளவையர் ராஜேசை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் இளம் பெண்ணின் மகளுக்கும் ஆபாச படங்களை காட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதுபற்றியும் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×