search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சைக்கிளில் சென்ற போது பரிதாபம்  வலிப்பு ஏற்பட்டு  தவறி விழுந்த தொழிலாளி சாவு.
    X

    சைக்கிளில் சென்ற போது பரிதாபம் வலிப்பு ஏற்பட்டு தவறி விழுந்த தொழிலாளி சாவு.

    • திருமலை நாதன் கோவில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவி த்தனர்.

    கடலூர:

    சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது50) தொழிலாளி. இவர் சிதம்பரத்தி லிருந்துகந்தமங்கலம் திருமலை நாதன் கோவில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போதே திடீரென வலிப்பு ஏற்பட்டு விழுந்து ள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர்

    உடனே ஆட்டோவில் இவரை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவி த்தனர். இதனையடுத்து இவரது மனைவி வைஜெய ந்திமாலா சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×