search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விஷம் குடித்த நெசவு தொழிலாளி சாவு
    X

    விஷம் குடித்த நெசவு தொழிலாளி சாவு

    • தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் மந்திவளவு பகுதியில் விஷம் குடித்து நெசவு தொழிலாளி பலியானர்.
    • இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் மந்திவளவு பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் கதிர்வேல் (வயது 22). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு வீட்டில் நெசவு தொழில் செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×