என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
    X

    ஆற்றில் மூழ்கி பலியான கார்த்திக்.

    ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

    • கங்களாஞ்சேரியில் உள்ள வெட்டாற்றில் குளிக்க சென்றுள்ளார்.
    • அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள இலவங்கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24).

    இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இரண்டு நாள் விடுமுறையில் கார்த்திக் வீட்டிற்கு வந்துள்ளார்.

    நேற்று மாலை தனது தம்பி கணேஷ், நண்பர் முகேஷ் ஆகியோருடன் கங்களாஞ்சேரியில் உள்ள வெட்டாற்றில் குளிக்க சென்றுள்ளார்.

    3 பேரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் உள்ள பள்ளத்தில் கார்த்திக் நீந்தியபோது திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்த உடன் வந்தவர்கள் கார்த்திக்கை மீட்க முயன்றும் முடியவில்லை.உடனடியாக அவர்கள் கரைக்கு வந்து நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நன்னிலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து கார்த்திக்கை தேடினர்.இரவு வெகுநேரமாகி விட்டதால் போதிய வெளிச்சம் இன்றி தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு துறையினர் மீண்டும் கார்த்திக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது 20 அடி ஆழத்தில் புதைந்திருந்த கார்த்திக்கை பிணமாக மீட்டனர்.

    பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறையில் ஊருக்கு வந்த வாலிபர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×