search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமத்தம்பட்டி அருகே 16 வயது சிறுமியை கடத்தி  பலாத்காரம்  செய்த வாலிபர்
    X

    கருமத்தம்பட்டி அருகே 16 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர்

    • காட்டு பகுதியில் வைத்து அவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி.

    இவர் 10-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். தந்தை இறந்து விட்டதால் சிறுமி தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

    சிறுமியின் வீட்டு அருகே தாஸ் என்ற கவுதம் (வயது 30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி விட்டது

    சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த தாஸ், சிறுமியிடம் பேச வேண்டும் என கூறி, அருகே உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து அவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நடந்ததை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி விட்டு தாஸ் அங்கு இருந்து சென்றார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதையடுத்து அவரது தாய் சிறுமியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சிறுமியை காட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×