search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 1½ வயது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்த இளம்பெண்
    X

    கோவையில் 1½ வயது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்த இளம்பெண்

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிமக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • இளம்பெண் நாகலட்சுமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் பாப்பம்மாள் லே-அவுட்டை சேர்ந்தவர் ரங்கசாமி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நாக லட்சுமி (வயது 34). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. பின்னர் ரங்கசாமி வெளியே சென்றார்.வீட்டில் தனியாக இருந்த நாக லட்சுமி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து என முடிவு செய்தார்.

    அதன்படி நாகலட்சுமி சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். பின்னர் தனது 1½ பெண் குழந்தைக்கும் சாணிப்பவுடரை கொடுத்தார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிபடி 2 பேரும் மயங்கினர். இதனை பார்த்து அக்கம் பக்கத்ததினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து இளம்பெண்ணின் கணவர் ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய தனது மனைவி மற்றும் 1½ வயது மகள் ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து ராமநாதபுரம் போலீசார் இளம்பெண் நாகலட்சுமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×