search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காயமடைந்த பாம்பை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சிகிச்சை அளித்த வாலிபர்
    X

    காயமடைந்த பாம்புக்கு சிகிச்சை.

    காயமடைந்த பாம்பை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சிகிச்சை அளித்த வாலிபர்

    • ஒரு டப்பாவில் அடைத்து கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்.
    • மருத்துவ உதவியாளர் பாம்பின் வாலில் அடிபட்ட காயத்துக்கு மருந்து வைத்து சிகிச்சை அளித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி இரணிய நகர் பகுதியில் பொது குடிநீர் குழாய் அருகே இன்று சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு படம் எடுத்த படி சீறிக் கொண்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பாம்பு பிடி நபர் சீர்காழியை சேர்ந்த பாண்டியனுக்கு தகவல் அளித்தனர்.

    அதன்படி அங்கு சென்ற பாண்டியன் நல்ல பாம்பினை லாவகமாக பிடித்தார்.

    அப்போது பாம்பின் வால் பகுதியில் முள் குத்தி காயம் ஏற்பட்டிருந்ததை கண்ட பாண்டியன் அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார்.

    பிடிபட்ட பாம்பினை ஒரு டப்பாவில் அடைத்து சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.

    அங்கு பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் தகவல் தெரிவித்தார்.

    மருத்துவ உதவியாளர் பாம்பின் வாலில் அடிபட்ட காயத்துக்கு மருந்து வைத்து சிகிச்சை அளித்தார்.

    சிகிச்சை அளிக்கப்பட்ட பாம்பினை பாண்டியன் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டார்.`

    Next Story
    ×