search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமண மண்டபம் அருகே  மளிகை கடையில் போதை பொருட்கள் விற்ற வாலிபர் கைது
    X

    திருமண மண்டபம் அருகே மளிகை கடையில் போதை பொருட்கள் விற்ற வாலிபர் கைது

    • திருமண மண்டபம் அருகே மளிகை கடையில் போதை பொருட்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்திலிருந்து புதுவை செல்லும் சாலை அனிச்சம் பாளையம் பாலிமர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக விழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பால சிங்கம் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட தில் விழுப்புரம் மருதூர் எம்.ஆர்.கே தெருவை சேர்ந்த சதாம் உசேன் (வயது 30), தனியார் மண்ட பம் எதிரே உள்ள மளிகை கடையில் விற்பனைக்காக வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 382 பாக்கெட் போதை மற்றும் குட்கா பொரு ட்களை கைப்பற்றிய விழு ப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சதாம் உசேனை கைது செய்தனர்.

    Next Story
    ×