search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
    X

    மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட காட்சி.

    மேட்டூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

    • திருநங்கைகள் சங்கம் சார்பாக மேட்டூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணி, அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தொழில் பயிற்சி வளாகத்தை வந்தடைந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்ட திருநங்கைகள் சங்கம் சார்பாக மேட்டூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணி, அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தொழில் பயிற்சி வளாகத்தை வந்தடைந்தது.

    பேரணியை மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, எய்ட்ஸ் நோய் பற்றி தேவையான ஆலோசனைகளை வழங்க மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம் உள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

    நிகழ்ச்சியில் மேட்டூர் நகர மன்ற தலைவர் சந்திரா, மேட்டூர் நகர பா.ம.க செயலாளர் மதியழகன், மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் அமுதா, நகர வன்னியர் சங்க பொறுப்பாளர் ரமேஷ், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×