search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
    X

    சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
    • நாமக்கல் செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ராமசாமி மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). இவர் நாமக்கலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 7-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சிங்கிலிபட்டி பெட்ரோல் பங்க் எதிரே, திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ராமசாமி மீது மோதியது.

    இதில் ராமசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி நாமக்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய திருமலைப்பட்டியைச் சேர்ந்த சங்கித்ராம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×