என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் பராமரிப்பின்றி காணப்படும் சாலை
- காம்பாய் கடை காளவாய் பகுதியில் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
- கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 50 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட காம்பாய் கடை காளவாய் பகுதியில் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் தேவைக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 50 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக அந்த சிமெண்ட் சாலையின் அருகில் இருக்கும் நீரோடையில் குப்பைகள் அடைந்து அந்த நீர் சிமெண்ட் சாலையின் மேல் செல்கிறது.
இதனால் அந்த சிமெண்ட் சாலை பழுதடைவதுடன் பொதுமக்களும் அந்த சாலையை பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் அந்த சிமெண்ட் சாலையின் அருகில் இருக்கும் நீரோடையை தூர் வாரி அந்த சாலையை காத்திட வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






