search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
    X

    முகாமை ராமலிங்கம் எம்.பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

    • சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • முடிவில் சிறந்த கிடாரி வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் ஒன்றியம், கன்னாரக்குடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணைத்தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் உதயசந்திரன், மிசா மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கொறடா கோவி.செழியன், ராமலிங்கம் எம்.பி. குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி, சினை ஊசி, சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு பரிசோதனை செய்தனர்.

    முடிவில் சிறந்த கிடாரி வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முகாமில் விவசாயிகள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×