search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம்
    X

    யூனியன் சேர்மன் பொன் முத்தையாபாண்டியன், பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் அன்னதானம் வழங்கிய போது எடுத்த படம்.

    சிவகிரியில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம்

    • சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், சிவகிரி பூக்குழித் திருவிழாவை முன்னிட்டும், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் படி, சிவகிரி வடக்கு ரத வீதியில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் மனோ கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட கோபு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன், மருத வள்ளி முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தரவடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் புல்லட் கணேசன், 9-வது வார்டு செயலாளர் பிச்சைமணி ஆகியோரின் ஏற்பாட்டில் அன்ன தானம் வழங்க ப்பட்டது.நிகழ்ச்சியில் நல்லசிவம், முனி யாண்டி, துரைராஜ், கார்த்திக், பரமசிவன், ராம்குமார், அய்யாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×