என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மதுபான கடையில் தகராறு- 2 பேருக்கு கத்திக்குத்து
Byமாலை மலர்23 Feb 2023 7:22 AM GMT
- வெட்டுப்பட்டான் குட்டை என்ற பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது.
- சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே வெட்டுப்பட்டான் குட்டை என்ற பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது. இங்கு ஆறுமுத்தாம்பாளையம் தொட்டி அப்புச்சி கோவில் தெருவை சேர்ந்த தர்மராஜ் (வயது 36), கண்ணன்(32,)ஆகியோர் மது அருந்த சென்றனர். மது அருந்தும் போது, அருகே இருந்த அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்கமல்(34) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.
இதில் ராஜ் கமல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கண்ணன் மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரையும், கை மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X