search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இளம்பெண்ணை காதலிப்பதில் தகராறு- டிராவல்ஸ் உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல்
    X

    இளம்பெண்ணை காதலிப்பதில் தகராறு- டிராவல்ஸ் உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல்

    • 2 பேரும் சேர்ந்து டிராவல்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.
    • ரோகித்துடன் மது குடிப்பதற்காக ரேஸ்கோர்சில உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார்.

    கோவை

    கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள ராஜா அண்ணாமலை ரோட்டை சேர்ந்தவர் துரை.இவரது மகன் விக்னேஷ் (வயது 28). இவரது நண்பர் சீர நாயக்கன் பாளையத்தை சேர்ந்த ரோகித் (26). இவர்கள் 2 பேரும் சேர்ந்து டிராவல்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.

    விக்னேசுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்தநிலையில் இளம்பெண் மன்சூர் அலி என்ற வாலிபருடன் பழகி வந்தார். இது சம்பந்தமாக விக்னேசுக்கும், மன்சூர் அலிக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று அவர் தனது நண்பர் ரோகித்துடன் மது குடிப்பதற்காக ரேஸ்கோர்சில உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். மது குடித்த பின்னர் 2 பேரும் 5-வது மாடியில் இருந்து 1-வது மாடிக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த மன்சூர் அலி தான் மறைத்து வைத்து இருந்த பீர் பாட்டிலால் விக்னேசை தாக்கினார். இதனை தடுக்க சென்ற ரோகித்தையும் பீர் பாட்டிலால் குத்தினார். இதில் அதிர்ச்சியடைந்த 2 பேரும் அங்கு இருந்து தப்பி செல்ல முயன்றனர்.

    அப்போது இவர்களை பின் தொடர்ந்து சென்ற அஸ்கர் அலி என்பவர் காரில் மறைத்து வைத்து இருந்த இரும்பு கம்பியால் 2 பேரையும் தாக்கினார். 2 பேருக்கும் கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் மன்சூர் அலி, அஸ்கர் அலி ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×