search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    டைமிங் பிரச்சினையால் நடு ரோட்டில் பஸ்களை நிறுத்தி தகராறு
    X

    திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலையில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    டைமிங் பிரச்சினையால் நடு ரோட்டில் பஸ்களை நிறுத்தி தகராறு

    • தேனியில் இருந்து வந்த பஸ் 4.05 மணி வரை செம்பட்டி பஸ் நிலையத்தில் நின்று கொண்டியிருந்தது. அந்த நேரத்தில், 4.10 மணிக்கு மதுரையிலிருந்து வரவேண்டிய பஸ் 4.05 மணிக்கு செம்பட்டி பஸ் நிலையம் வந்துவிட்டது.
    • மதுரையில் இருந்த வந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் தேனியில் இருந்து வந்த டிரைவர் மற்றும் கண்டக்டருடன் தகராறில் ஈடுபட்டனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வழியாக வெளி ஊர்களுக்கு ஏராளமான பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்கிறது. இதனால் செம்பட்டி பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் தேனியில் இருந்து செம்பட்டி வழியாக, பழனிக்கு செல்லும் ஒரு தனியார் பஸ் 4 மணிக்கு செம்பட்டி பஸ் நிலையத்தை கடந்து செல்ல வேண்டும்.

    அதேபோல் மதுரையில் இருந்து வரும் மற்றொரு தனியார் பஸ் செம்பட்டி வழியாக பழனிக்கு செல்லும் போது 4.10 மணிக்கு செம்பட்டி பஸ் நிலையத்தை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் தேனியில் இருந்து வந்த பஸ் 4.05 மணி வரை செம்பட்டி பஸ் நிலையத்தில் நின்று கொண்டியிருந்தது. அந்த நேரத்தில், 4.10 மணிக்கு மதுரையிலிருந்து வரவேண்டிய பஸ் 4.05 மணிக்கு செம்பட்டி பஸ் நிலையம் வந்துவிட்டது.

    இதனால், மதுரையில் இருந்த வந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் தேனியில் இருந்து வந்த டிரைவர் மற்றும் கண்டக்டருடன் தகராறில் ஈடுபட்டனர். 2 பஸ்களையும் திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி பஸ்கள் பெரும் சிரமத்திற்கு இடையே கடந்து சென்றது.

    Next Story
    ×