search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    உரிமம் இன்றி விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
    X

    உரிமம் இன்றி விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

    • உரிமம் இன்றி விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில்

    அரியலூர்:

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உரிமம் இன்றி விற்பனை செய்தால் கடை உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், தற்போது கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடிதொடங்கிஉள்ளது. விளைச்சல் அதிகரித்து அதிக வருமான தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது. தரமான விதைகளை சரியான விலையில் விவசாயிகளுக்கு கிடைத்திட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டவிவசாயிகள் நிலக்கடலை விதைகளை வாங்கும் போது தமிழ்நாடுஅரசால் விதை விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே தங்களுக்கு தேவையான நிலக்கடலை விதைகளை வாங்கவேண்டும். விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் ரக விதைகளை வாங்கும் போது விதைக்கான விற்பனை ரசீதை கேட்டுப் பெறவேண்டும்.

    மேலும், தாங்கள் வாங்கிய விற்பனை ரசீதை அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வியாபாரிகள் நிலக்கடலை விதைகளை விற்பனை செய்யும் போது விவசாயிகளுக்கு உரிய ரசீது வழங்கவேண்டும். விதை விற்பனை செய்யும் வியாபாரிகள் விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். விதை விற்பனை உரிமம் இன்றி விதைகளை விற்பனை செய்தாலோ, காலாவாதியான விதைகளை விற்பனை செய்தாலோ, ரசீதுவழங்காமல் விற்பனை செய்தாலோ விதை சட்டப்படி விற்பனையாளர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதைகள் தொடர்பான ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 0431 -2420587 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×