search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரெட்டிபாளையத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை
    X

    ரெட்டிபாளையத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை

    • ரெட்டிபாளையத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
    • கோவில்களுக்கு சொந்தமான 3.88 ஏக்கர் நிலங்களை அப்பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை குடியிருப்பு பகுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே ரெட்டிபாளையம் கிராமத்தில் விநாயகர் கோயில்,செல்லியம்மன் கோயில்,சொர்ணபுரீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு சொந்தமான 3.88 ஏக்கர் நிலங்களை அப்பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை குடியிருப்பு பகுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதை அரியலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜ், தனி வட்டாட்சியர் கலைவாணன் மற்றும் கோயில் செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு பகுதி என உறுதி செய்தனர். இந்த நிலங்களை அளவீடு செய்த பின் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78ன் படி ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


    Next Story
    ×