search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புனித அன்னம்மாள் ஆலய தேர் பவனி
    X

    புனித அன்னம்மாள் ஆலய தேர் பவனி

    • புனித அன்னம்மாள் ஆலய தேர் பவனி நடைபெற்றது.
    • கொடியேற்றத்துடன் தொடங்கியது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி புனித அன்னம்மாள் ஆலய ஆண்டு விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதன்பின்னர் மைக்கேல் பட்டி பங்குத்தந்தை அடைக்கலசாமி திருப்பலி செய்து திருத்தேரை மந்திரித்தார். தேரில் அன்னம்மாள் சொரூபத்தை வைத்து பவனி நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு திருப்பலியோடு ஆண்டு பெருவிழா நிறைவு பெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×