search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் நாளை எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்-எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்
    X

    அரியலூரில் நாளை எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்-எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்

    • அரியலூரில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்
    • கூட்டத்தில் அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை அ.தி.மு.க. நிறுவன தலைவரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.இ.அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றுகிறார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக பொறுப்பாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×