search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்   - அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் பெருமிதம்
    X

    இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் - அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் பெருமிதம்

    • இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்று அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
    • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா

    அரியலூர்:

    அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டதலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் முருகேசன் வரவேற்றார். தலைமைக்கழக பேச்சாளர்கள் ஆடுதுறை உத்திராபதி, வேங்கை சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் எம்.எல்.ஏ. பாளை.து.அமரமூர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் பாலு உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில், மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:

    இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். இவர் மட்டுமே தமிழகம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களுக்காகவும் போராடி வருகிறார். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களுக்கும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகவும் முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். காஷ்மீர் மக்கள் மீது மத்திய அரசு கொண்டு வந்த அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்தவரும் மு.க.ஸ்டாலின். ஜனநாயகத்தின் குரல் வலை நெரிக்கப்படுகிறது. இது நாளை நமது மாநிலத்தையும் பாதிக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து தான் குரல் கொடுத்தார். உதயநிதி அமைச்சரானது குறித்து சசிகலாவும், தினகரனும் பேசுவது ஏனென்றால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வை கைப்பற்றி, அதன் மூலமாக ஆட்சியை கைப்பற்றி, தமிழகத்தை சுருட்டி வளைத்து விடலாம் என நினைத்தார்கள். அது நடக்கவில்லை என்பதால் அந்த வெறுப்பில் பேசுகிறார்கள். அதேபோல், ஒரு ஆட்சி எப்படி நடத்த கூடாது என உதாரணமாக நடத்தி காட்டியவர் தான் எடப்பாடி பழனிசாமி. இவர்களே கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், தற்காலிக ஒருங்கிணைப்பாளர் என புதிய புதிய பொறுப்புகளை வைத்துக்கொள்வர். தற்போது, அந்த சீட்டையும் நீதிமன்றம் பிடுங்கிவிட்டது. உங்களது சீட் எங்கு உள்ளது என கண்டுபிடியுங்கள்.

    தற்போது பெயருக்கு முன்னாள் என்ன பொறுப்பு போடுவது என்றே தெரியாமல் பழனிசாமி குழம்பிபோய் உள்ளார். உங்களது விமர்சனங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய செயல்பாட்டின் மூலம் பதில் சொல்வார். காந்திருங்கள், காலம் இன்னும் உங்களுக்கு பல அதிர்ச்சிகளை தர காத்திருக்கிறது. தமிழக எம்எல்ஏக்களில் உதயநிதி ஸ்டாலின் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரது செயல்பாடு போகப்போக அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    Next Story
    ×