என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
    X

    மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

    • மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • வட்டார வள மையம் சார்பில் நடைபெற்றது

    அரியலூர்:

    வரும் டிச.3 -ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மாற்றுத்தினாளி குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதில் முக்கிய வத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை களுக்கு தீர்வு காண்பது குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், டிச.3 -ம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    அதன் ஒரு பகுதியாக அரியலூரில் வட்டார வள மையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜப்பிரியன் கொடியசைத்து வைத்தார். பேரணியானது பிரதான கடை வீதி, பேருந்து நிலையம் வழியாகச் சென்று அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நிறை வடைந்தது.

    பேரணியில், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாமிதுரை, பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜேஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல் திருமானூர், இலையூர், நாகமங்கலம், ெஜயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளமையம் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    Next Story
    ×