என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
விஷ செடியை அரைத்து குடித்த பெண் சாவு
- விஷ செடியை அரைத்து குடித்த பெண் உயிரிழந்தார்.
- வயிற்று வலியினால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது
அரியலூர்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி செந்தமிழ்செல்வி(வயது 57). இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியினால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்று வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று காலை செந்தமிழ்செல்விக்கு வயிற்றுவலி அதிகரிக்கவே தனது வீட்டிற்கு அருகில் இருந்த விஷசெடியை அரைத்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் செந்தமிழ்செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு செந்தமிழ்செல்வியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் காசிநாதன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்."
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்