search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    ஜெயங்கொண்டத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

    • பானுப்பிரியா ஜெயங்கொண்டம் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி செங்குந்தபுரத்திற்கு வந்தார்.
    • பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பானுப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 4பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புது குடி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மணி கண்ணன். இவரது மனைவி பானுப்பிரியா (வயது 28).

    இவர் நேற்று மதியம் ஜெயங்கொண்டம் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி செங்குந்தபுரத்திற்கு வந்தார். பின்னர் புதுகுடி கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பானுப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 4பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றனர்.

    இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


    Next Story
    ×