search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கலை திருவிழா
    X

    பள்ளியில் நடந்த கலை திருவிழாவில் மாணவ- மாணவிகள் நடனமாடினர்.

    ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கலை திருவிழா

    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
    • கல்வியாளர் ஆனந்த சேகர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரைப்படி மதுக்கூர் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நிறைவு விழா கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு பள்ளி அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராசு தலைமையேற்று நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் ஜமீலா மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    இந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் மனோகரன், ஒன்றிய குழு உறுப்பினர் அன்புச்செல்வி விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், துணைத் தலைவர் கார்த்திகேயன், பி.டி.ஏ. துணைத் தலைவர் ரங்கசாமி, பொருளாளர் பிரசன்னா, பள்ளி மேலாண்மை குழு தலைவி நிர்மலா தேவி, கல்வியாளர் ஆனந்த சேகர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    முடிவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகளும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.

    மேலும் வானவில் மன்றம் தொடக்க விழாவும் நடைபெற்றது.

    Next Story
    ×