என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கும்பகோணத்தில், விழிப்புணர்வு ஊர்வலம்
- மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி ஊர்வலம்.
- ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கும்பகோணம்:
கும்பகோணம் வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் கும்பகோணம் போலீஸ்துறை சார்பில் பொதுமக்களிடம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்பு ணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கும்பகோணம் கோர்ட்டு வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை கும்பகோணம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர்- மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சண்முகப்பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் திரளானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைவ ருக்கும் கும்பகோணம் உட்கோட்ட போலீஸ்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Next Story






