search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  வாலிபர் மீது தாக்குதல்
    X

    பண்ருட்டியில் வாலிபர் மீது தாக்குதல்

    • பண்ருட்டி அடுத்த பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி . இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மேல்மாம்பட்டு அருள்செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து பாலாஜியை தாக்கியுள்ளனர்.
    • இதனால் காயம் அடைந்த பாலாஜி பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவர் கடந்த 6-ந்தேதி பண்ருட்டியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேல்மாம்பட்டு அருள்செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து பாலாஜியை தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த பாலாஜி பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×