என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் : டி.என்.ஏ ஆய்வு பயன்பாடு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு
    X

    விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட மாணவிகள்.

    கொடைக்கானல் : டி.என்.ஏ ஆய்வு பயன்பாடு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு

    • குற்றவியல் வழக்குகளில் டி.என்.ஏ ஆய்வு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து மாணவிகளுக்கு விஞ்ஞானி கஸ்பைக்கர் எடுத்துரைத்தார்.
    • டி.என்.ஏ ஆய்வின் முக்கியத்துவம், ஆய்வில் கண்டறிப்பட்ட உண்மைகள், சிக்கலான வழக்குகளில் இவை எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து எடுத்துரைத்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வான்இயற்பியல் ஆய்வகம் உள்ளது. இங்கு குற்றவியல் வழக்குகளில் டி.என்.ஏ ஆய்வு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து மாணவிகளுக்கு விஞ்ஞானி கஸ்பைக்கர் எடுத்துரை த்தார்.

    மேலும் மாணவி களின் சந்தேகங்க ளுக்கும் விளக்கம் அளித்தார். டி.என்.ஏ ஆய்வின் முக்கியத்துவம், ஆய்வில் கண்டறிப்பட்ட உண்மைகள், சிக்கலான வழக்குகளில் இவை எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து சுவார ஸ்யமாக எடுத்துரைத்தார். மனிதனின் எல்லா பாகத்திலும் டி.என்.ஏ உள்ளது.

    நகம், கண், கை, கால்கள் உள்ளிட்ட பாகங்களிலும் டி.என்.ஏ உள்ளது. இதனை வைத்தும் குற்றங்களில் ஈடுபட்டவர்களை எளிதில் கண்டறியலாம் என தெரிவித்தார். 148 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் ஒவ்வொரு வரின் டி.என்.ஏவையும் சேமித்து வைப்பது கடினம்.

    பிற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேற்றம் அடைந்தால் இதுபோன்ற சேமிப்பு சாத்தியமாகும். இதன் ஆராய்ச்சி பணிகள் தற்போது வளர்ந்த நாடு களில் நடைபெற்று வருகி றது. எனவே இதுகுறித்து ஆராய்ச்சி படிப்புகளில் மாணவிகள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றார். இந்நி கழ்ச்சியில் வான்இயற்பியல் ஆராய்ச்சியாளர் எபினேசர் மற்றும் ஆய்வக பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×