என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா
    X

    வளைகாப்பு விழா நடந்தபோது எடுத்த படம்.

    கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா

    • குமாரபாளையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 60 கர்ப்பிணி பெண்க ளுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
    • விழாவில் புளி சதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், கீரை சாதம், காய் சாதம், தயிர் சாதம், உள்ளிட்ட பலவகை உணவு வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 60 கர்ப்பிணி பெண்க ளுக்கு வளைகாப்பு விழா குமாரபாளையம் நகராட்சி நடராஜா திருமண மண்டபத்தில் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடை பெற்றது. திட்ட அலுவ லர் வித்யலட்சுமி முன்னி லையில் நடைபெற்ற விழா வில் தாய்மார்களுக்கு மாலை கள், வளையல், மஞ்சள், குங்குமம், தட்டு உள்ளிட்ட பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    இதில் புடவை இல்லாதது கண்ட சேர்மன் விஜய்கண்ணன் உடனடியாக 60 சேலைகள் வாங்கி வர சொல்லி, குத்துவிளக்கேற்றி வைத்து அனைவருக்கும் சீர்வரிசை தட்டுடன் புடைவையும் கொடுத்து வாழ்த்தினார். இதில் பெண் கவுன்சிலர்கள் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, மஞ்சள் அரிசியால் கர்ப்பிணி பெண்களுக்கு நலுங்கு வைத்தனர்.

    விழாவில் புளி சதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், கீரை சாதம், காய் சாதம், தயிர் சாதம், உள்ளிட்ட பலவகை உணவு வழங்கப்பட்டது.

    இதில் கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், கனக லட்சுமி, வள்ளியம்மாள், பரிமளம், மகேஸ்வரி, சியாமளா, கிருஷ்ணவேணி, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நிர்வாகிகள் செந்தில்குமார், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×