search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பக்ரீத் பண்டிகை: போச்சம்பள்ளி வார சந்தையில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    பக்ரீத் பண்டிகை: போச்சம்பள்ளி வார சந்தையில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • போச்சம்பள்ளியில் புகழ்பெற்ற வார சந்தை ஞாயிற்றுக் கிழமை கூடுவது வழக்கம்.
    • 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி.

    போச்சம்பள்ளி:

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் புகழ்பெற்ற வார சந்தை ஞாயிற்றுக் கிழமை கூடுவது வழக்கம்.

    இந்நிலையில் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் இன்று வழக்கத்தை விட சுமார் 8 ஆயிரம் ஆடுகள் விற்பனைகாக கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டுவந்தனர்.

    அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கிய நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், கோலார், மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர், மற்றும் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி போன்ற இடங்களில் இருந்து வியாபாரிகள் பொதுமக்கள் என சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் ஆடுகளை வாங்கவும், விற்கவும் குவிந்தனர்.

    வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ.12 ஆயிரத்திற்கு விலை போகும் நிலையில் பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரையில் விலை போனது.

    இதேபோல் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஜோடி ஆடு ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.80 ஆயிரம் வரையில் விற்பனை ஆனாது. இன்று ஒரு நாளில் மட்டும் போச்சம்பள்ளி வார சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனாதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேலும் பண புழக்கம் அதிகமாக உள்ள நிலையில் போச்சம்பள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×